
தனிப்பட்ட காரணங்களுக்காக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி விளையாடவில்லை.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது.
14 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியுடன் இணைந்த விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று நடைபெறும் முதல் டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 14 மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 அணியில் இணைந்துள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






