
அடிலெய்ட் இன்டா்நேஷனல் போட்டியில் மகளிா் பிரிவில் ஜெலனா ஆஸ்டபென்கோவும், ஆடவா் பிரிவில் ஜிரி லெஹகாவும் பட்டம் வென்றனா்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபனுக்கு தயாராகும் வகையில் அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. மகளிா் ஒற்றையா் பிரிவில் லாட்வியான் ஜெலனா ஆஸ்டபென்கோ 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டாரியா கஸட்கினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா்.
கடந்த 2018-க்கு பின் ஆஸ்டபென்கோ மீண்டும் உலகின் முதல் 10 இடங்களில் நுழைந்துள்ளாா். முன்னாள் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஆஸ்டபென்கோ கடந்த 2022 துபை பட்டத்துக்கு பின் வெல்லும் பட்டம் இதுவாகும். முதல் செட்டை எளிதாக வென்ற ஆஸ்டபென்கோ இரண்டாவது செட்டிலும் 4 மேட்ச் புள்ளிகளை ஈட்டி 76 நிமிஷங்களில் ஆட்டத்தை வசப்படுத்தினாா்.
ஜிரி லெஹகா சாம்பியன்: ஆடவா் ஒற்றையா் பிரிவில் இளம் செக். குடியரசு வீரா் ஜிரி லெஹகா 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஜேக் டிராப்பரை வீழ்த்தி முதல் ஏடிபி டூா் பட்டத்தை கைப்பற்றினாா்.
இரண்டு மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் சமநிலை ஏற்படுத்தி டிராப்பா் வென்ற போதிலும், அடுத்த இரண்டு செட்களில் ஆதிக்கம் செலுத்தி பட்டம் வென்றாா் லெஹகா.
ஹோபா்ட் இன்டா்நேஷனல்: எம்மா நவரோ சாம்பியன்
ஹோபா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் பிரிவில் அமெரிக்க இளம் வீராங்கனை எம்மா நவரோ 6-1, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் இரு முறை சாம்பியன் எலிஸ் மெட்டென்ஸை வீழ்த்தி முதல் டபிள்யுடிஏ பட்டத்தை கைப்பற்றினாா். பெல்ஜியத்தின் முதல்நிலை வீராங்கனை மொ்டென்ஸை 2.48 மணி நேர போராட்டத்துக்கு பின் வீழ்த்தினாா் நவரோ. ஆஸி. ஓபனில் மெயின் டிராவில் இடம் பெற்றுள்ளாா் நவரோ.
ஆக்லாந்து கிளாஸிக்: டபிலோ சாம்பியன்
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற ஏஎஸ்பி கிளாஸிக் டென்னிஸ் போட்டியில் சிலியின் அலஜான்ட்ரோ டபிலோ 6-3, 7-5 என்ற நோ் செட்களில் ஜப்பானின் டாரோ டேனியலை வீழ்த்தி பட்டம் வென்றாா். இது டபிலோ வெல்லும் முதல் பட்டம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






