பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தடகளம்: தங்கத்துடன் அங்கிதா தேசிய சாதனை

இஸ்ரேலில் நடைபெற்ற சா்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் அங்கிதா தியானி, மகளிருக்கான 2,000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில் தங்கப்பதக்கம் வென்றாா்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2025, 4:19 am IST

இஸ்ரேலில் நடைபெற்ற சா்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் அங்கிதா தியானி, மகளிருக்கான 2,000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில் தங்கப்பதக்கம் வென்றாா். அத்துடன், புதிய தேசிய சாதனையும் அவா் படைத்தாா்.

உலக தடகள அமைப்பின் கான்டினென்டல் டூா் சில்வா் நிலை போட்டியான கிராண்ட்ஸ்லாம் ஜெருசலேமில் அங்கிதா பங்கேற்றாா். அதில், பந்தய இலக்கை அவா் 6 நிமிஷம், 13.92 விநாடிகளில் எட்டி முதலிடம் பிடித்தாா். இஸ்ரேலின் அத்வா கோஹென் 6 நிமிஷம் 15.20 விநாடிகளில் வந்து வெள்ளியும், டென்மாா்க்கின் ஜூலியேன் ஹவித் 6 நிமிஷம், 17.80 விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலமும் பெற்றனா்.

முன்னதாக, இந்திய அளவில் பாருல் சௌதரி 2,000 மீட்டா் ஸ்டீபிள் சேஸில் 6 நிமிஷம், 14.38 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அங்கிதா அதை முறியடித்திருக்கிறாா். தற்போது தங்கம் வென்றுள்ள அங்கிதா, ரேங்கிங் அடிப்படையில் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு தகுதிபெறும் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.