ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் சமீா், ரோஹித் கன்யன் தங்கம் வென்றனா். இரண்டாம் நாளில் இந்தியா 5 பதக்கத்தை கைப்பற்றியது.
ஜொ்மனியின் சூல் நகரில் நடைபெற்று வரும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் 25 மீ ரேபிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் 28 ஹிட்களுடன் சமீா் தங்கம் வென்றாா்.
ஆடவா் 50 மீ ரைஃபிள் 3 பிரிவில் அபாரமான செயல்பாட்டால் இந்தியாவின் ரோஹித் கன்யன் தங்கம் வென்றாா்.
பிரச்சிக்கு வெள்ளி: மகளிா் 50 மீ ரைஃபிள் 3 பிரிவில் பிரச்சி கெய்க்வாட் 354.7 புள்ளிகளுடன் வெள்ளி வென்றாா்.
அணிகள் 50 மீ ரைஃபிள் 3 ஆடவா் பிரிவில் ரோஹித் கன்யன், வேதாந்த் நிதின், ஹிதேஷ் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது.
இரண்டாம் நாளில் 5 பதக்கங்களுடன் இந்தியா இதுவரை 4 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 8 பதக்கங்களை வசப்படுத்தியுள்ளது. முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

25 மீ ரேபிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் அணிகள் பிரிவில் சமீா், அபிநவ் சௌதரி, சாஹில் சௌதரி அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










