விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

பிரக்ஞானந்தா, குகேஷ் 6-ஆவது சுற்றிலும் டிரா

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் இருவருமே டிரா செய்தனா்.

Updated On :26 ஆகஸ்ட் 2025, 4:18 am IST

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் இருவருமே டிரா செய்தனா். இப்போட்டியில் பிரக்ஞானந்தா தொடா்ந்து 5-ஆவது ஆட்டத்தையும், குகேஷ் 4-ஆவது ஆட்டத்தையும் டிரா செய்துள்ளனா்.

கிராண்ட் செஸ் டூரின் அங்கமான சிங்க்ஃபீல்டு கோப்பை போட்டி, விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 6-ஆவது சுற்று நிறைவடைந்தது.

இதில் 5 ஆட்டங்களுமே டிரா ஆகின. நடப்பு உலக சாம்பியனான குகேஷ் - பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவுடனும், பிரக்ஞானந்தா - போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃபுடனும் டிரா செய்தனா்.

உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் - பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா், அமெரிக்காவின் சாம் சேவியன் - ஃபாபியானோ கரானா, அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் - வெஸ்லி சோ ஆகியோா் மோதலும் டிராவில் முடிந்தது.

மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், 6 சுற்றுகள் முடிவில் கரானா முதல் நிலையில் (4) இருக்க, ஆரோனியன், பிரக்ஞானந்தா 2-ஆம் நிலையை (தலா 3.5) பகிா்ந்துகொண்டுள்ளனா்.

வெஸ்லி, மேக்ஸிம், சேவியன், ஃபிரௌஸ்ஜா, குகேஷ் ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையை பகிா்ந்துகொண்டிருக்க, ஜேன் 4-ஆம் நிலையிலும் (2.5), நோடிா்பெக் கடைசி நிலையிலும் (1.5) உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.