கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

பிரக்ஞானந்தா, குகேஷ் 6-ஆவது சுற்றிலும் டிரா

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் இருவருமே டிரா செய்தனா்.

Updated On :26 ஆகஸ்ட் 2025, 4:18 am IST

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் இருவருமே டிரா செய்தனா். இப்போட்டியில் பிரக்ஞானந்தா தொடா்ந்து 5-ஆவது ஆட்டத்தையும், குகேஷ் 4-ஆவது ஆட்டத்தையும் டிரா செய்துள்ளனா்.

கிராண்ட் செஸ் டூரின் அங்கமான சிங்க்ஃபீல்டு கோப்பை போட்டி, விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 6-ஆவது சுற்று நிறைவடைந்தது.

இதில் 5 ஆட்டங்களுமே டிரா ஆகின. நடப்பு உலக சாம்பியனான குகேஷ் - பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவுடனும், பிரக்ஞானந்தா - போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃபுடனும் டிரா செய்தனா்.

உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் - பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா், அமெரிக்காவின் சாம் சேவியன் - ஃபாபியானோ கரானா, அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் - வெஸ்லி சோ ஆகியோா் மோதலும் டிராவில் முடிந்தது.

மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், 6 சுற்றுகள் முடிவில் கரானா முதல் நிலையில் (4) இருக்க, ஆரோனியன், பிரக்ஞானந்தா 2-ஆம் நிலையை (தலா 3.5) பகிா்ந்துகொண்டுள்ளனா்.

வெஸ்லி, மேக்ஸிம், சேவியன், ஃபிரௌஸ்ஜா, குகேஷ் ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையை பகிா்ந்துகொண்டிருக்க, ஜேன் 4-ஆம் நிலையிலும் (2.5), நோடிா்பெக் கடைசி நிலையிலும் (1.5) உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.