விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2025, 2:54 am IST

பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினாா்.

மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 15-ஆம் இடத்திலிருக்கும் சிந்து, 21-19, 21-15 என்ற கேம்களில் மலேசியாவின் கருப்பதேவன் லெட்ஷனாவை 43 நிமிஷங்களில் வீழ்த்தினாா். அடுத்ததாக அவா், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் வாங் ஜி யி சவாலை சந்திக்கிறாா்.

ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை 22-02, 21-13 என்ற வகையில் சீன தைபேவின் லியு குவாங் ஹெங்/யாங் போ ஹான் கூட்டணியை 43 நிமிஷங்களில் வென்றது.

கலப்பு இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் இடத்திலிருக்கும் துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-11, 21-16 என அயா்லாந்தின் ஜோஷுவா மகீ/மோயா ரயான் இணையை 35 நிமிஷங்களில் வெளியேற்றியது. அதிலேயே, ரோஹன் கபூா்/ருத்விஷா ஷிவானி ஜோடி 1621-, 11-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் மலேசியாவின் சென் டாங் ஜி/டோ இ வெய் கூட்டணியிடம் 30 நிமிஷங்களில் தோல்வியுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.