கால்பந்து உலகக் கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்ல மொராக்கோ திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால் விலங்கு ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
2030ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் மொராக்கோ, போர்ச்சுகள் உள்பட 6 நாடுகளில் நடைபெறுமென ஃபிபா அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரான டாக்டர். ஜேன் காடெல் மொராக்காவின் 30 லட்சம் நாய்களை கொல்லும் கொடுஞ்செயல் திட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஃபிபாவுக்கு அவர் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஃபிபா உடனடியாக தலையிட இதை நிறுத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
ஐஏசி (சர்வதேச விலங்குகள் நல அமைப்பு) ஃபிபாவின் அறிவிப்பில் இருந்து மொராக்கோ ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டிருக்கிறது. ஊசிகள் பயன்படுத்தியும் கொடுமையான பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தி இந்த கொடுமையான செயல்களில் மொராக்கோ அரசு களமிறங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
கடைசியாக கத்தாரில் 2022இல் நடந்த உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனா கோப்பையை வென்றது.
உருகுவே 1930இல் முதல்முறையாக போட்டிகளை நடத்தி சாம்பியன் பட்டம் பெற்றது. தற்போது நூற்றாண்டை முன்னிட்டு உருகுவே நாட்டிலும் ஒரு போட்டி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

8 கோல்களைத் தடுத்த கோல்கீப்பர்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த துருக்கிக்கு அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா!

88 ஆண்டுகளாகத் தோல்வியே சந்திக்காத பிரேசில்..! வினிசியஸ் ஜூனியருக்கு ரசிகர்கள் நன்றி!

கால்பந்து உலகக் கோப்பை: சமனில் முடிந்த பிரேசில் - மொராக்கோ ஆட்டம்!

கால்பந்து அனைவருக்குமானது..! புலம்பெயர்ந்தோரை ஆதரிக்கும் ஆஸ்திரேலியா!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



