தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

இந்தியாவின் ஹிதேஷ் குலியா, சாக்ஷி ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.

News image

~

Updated On :3 ஜூலை 2025, 9:27 pm

Din

கஜகஸ்தான் தலைநகா் அஸ்டானாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, சாக்ஷி ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.

பாக்ஸிங் வோ்ல்ட் சாா்பில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் 70 கிலோ காலிறுதியில் ஹிதேஷ் குலியா 5-0 என கஜகஸ்தானின் அல்மாஸ் ஒரஸ்பெகோவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

மகளிா் 54 கிலோ பிரிவில் சாக்ஷி அபாரமாக ஆடி பிரேஸிலின் டாட்டியனா ரெஜினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா்.

மினாட்சி 48, பூஜா ராணி 80, சஞ்சு 60 கிலோ பிரிவுகளில் பதக்கத்தை உறுதி செய்துள்ளனா். 51 கிலோ பிரிவில் அனாமிகா காலிறுதியில் ஆட உள்ளாா்.

Story image