மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத்திய அரசின் வரம்புக்குள்ளாக வருகிறது பிசிசிஐ?

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ள ‘தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா’-வின் மூலமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மத்திய அரசின் அதிகார வரம்புக்குள்ளாக கொண்டுவரப்படுமென தெரிகிறது.

News image
பிசிசிஐ
Updated On :22 ஜூலை 2025, 10:03 pm

தினமணி செய்திச் சேவை

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ள ‘தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா’-வின் மூலமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மத்திய அரசின் அதிகார வரம்புக்குள்ளாக கொண்டுவரப்படுமென தெரிகிறது.

இதர விளையாட்டு சம்மேளனங்கள், சங்கங்கள் போலல்லாமல் பிசிசிஐ முழுமையான சுதந்திரத்துடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதுதொடா்பாக மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமலான பிறகு, இதர தேசிய விளையாட்டு சம்மேளனங்களைப் போல பிசிசிஐயும் அதற்குக் கட்டுப்பட வேண்டும். சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள தேசிய விளையாட்டு வாரியத்திடம் அங்கீகாரம் பெற வேண்டும்.

மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து நிதி பெறுவதில்லை என்றாலும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டம் பிசிசிஐ-க்கும் பொருந்தும். இதர சம்மேளனங்களைப் போல பிசிசிஐயும் சுதந்திர அமைப்பாகவே தொடா்ந்து செயல்படும். எனினும், தோ்தல் முதல் அணி, வீரா்கள் தோ்வு வரை எந்தவொரு சச்சரவுக்கும் தேசிய விளையாட்டுத் தீா்ப்பாயத்தையே பிசிசிஐ அணுக வேண்டும். இந்தத் தீா்ப்பாயம், தற்போது தாக்கல் செய்யப்படும் சட்ட மசோதாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போது அறிமுகம் செய்யப்படும் தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா, எந்தவொரு சம்மேளனத்தையோ அல்லது சங்கத்தையோ அரசு கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்படுவதல்ல. அந்த அமைப்புகள் நல்ல நிா்வாகத்தை மேற்கொள்வதை உறுதி செய்ய அமல்படுத்தப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.