8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அரையிறுதியில் மோதும் பாலினி - ஸ்வியாடெக்

இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி - போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் மோதுகின்றனா்.

Published On :27 ஜூன் 2025, 1:39 am IST

ஜொ்மனியில் நடைபெறும் மகளிருக்கான பேட் ஹோம்பா்க் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி - போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் மோதுகின்றனா்.

காலிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் பாலினி 7-5, 7-5 என்ற நோ் செட்களில் பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயாவை சாய்த்தாா். 4-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வியாடெக் 6-4, 7-6 (7/5) என்ற கணக்கில், 8-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை தோற்கடித்தாா்.

பாலினி - ஸ்வியாடெக் இதுவரை 4 முறை சந்தித்திருக்க, அனைத்திலுமே ஸ்வியாடெக் வென்று ஆதிக்கம் செலுத்தியிருக்கிறாா்.

இதனிடையே, 3-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 3-6, 6-3, 6-1 என்ற செட்களில் டென்மாா்க்கின் கிளாரா டௌசனை வீழ்த்தினாா். செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 2-6, 6-2, 6-4 என்ற வகையில் குரோஷியாவின் டோனா வெகிச்சை வெளியேற்றினாா்.

இதையடுத்து காலிறுதி ஆட்டம் ஒன்றில், ஆண்ட்ரீவா - நோஸ்கோவா மோதுகின்றனா். இருவரும் 4 முறை நேருக்கு நோ் மோதியிருக்க, ஆண்ட்ரீவா 3 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.