தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

ஆர்ஜென்டீனாவுடனான தோல்வி எதிரொலி: பிரேசில் பயிற்சியாளர் நீக்கம்!

பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளர் நீக்கப்பட்டது குறித்து...

Dorival Junior

பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளர் - படம்: ஏபி

Published On :

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனாவுடனான தோல்வியினால் பிரேசில் பயிற்சியாளர் நீக்கப்பட்டுள்ளார்.

பிரேசில் பயிற்சியாளர் டோரிவல் ஜூனியரின் 14 மாத மோசமான செயல்பாடுகளால் பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு இந்த முடிவினை எடுத்துள்ளது.

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா உடன் 4-1 என பிரேசில் மோசமாக தோல்வியுற்றது.

தென்னமரிக்க கூட்டமைப்பில் 10 அணிகளில் டாப் 6 அணிகள் நேரடியாக தகுதிபெறும்.

மோசமான பயிற்சியாளரா?

பிரேசில் தற்போது இந்தப் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறது.

62 வயதாகும் பயிற்சியாளர் டோரிவல் ஜூனியரின் பதவிக்காலம் முடிந்ததாக கூட்டமைப்பு கூறியுள்ளதாக ரோட்ரிக்ஸ் கூறினார்.

இவருடைய பதவிக்காலத்தில் பிரேசில் அணி 7 வெற்றி, 7 டிரா, 2 தோல்விகளை சந்தித்துள்ளன.

கடைசி 4இல் ஒரு தோல்வியும் 25 கோல்கள் அடித்தும் 17 கோல்கள் விடுக்கொடுத்தும் இருக்கிறது பிரேசில் அணி.

அடுத்த பயிற்சியாளர் யார்?

கடந்தாண்டு கோபா அமெரிக்கா காலிறுதியில் பெனால்டி வாய்ப்பில் பிரேசில் வெளியேறியது.

2030 வரை ரோட்ரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவராக இருப்பார். ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் கார்லோ அன்செலட்டி, அல்-ஹிலால் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸை நியமிக்க பிரேசில் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இருவருக்கும் அடுத்த மாதம் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.