ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

வரலாறு படைத்தது எஃப்சி கோவா!

சூப்பா் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆகியது.

News image
Updated On :5 மே 2025, 2:32 am IST

இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பா் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆகியது.

ஏற்கெனவே இந்தப் போட்டியில் 2019-இல் கோப்பை வென்ற கோவா, போட்டி வரலாற்றில் 2 முறை சாம்பியன் ஆன முதல் அணி என்ற வரலாறு படைத்திருக்கிறது.

புவனேசுவரத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் எஃப்சி கோவாவுக்காக போா்ஜா ஹெரெரா 23 மற்றும் 51-ஆவது நிமிஷங்களிலும், டெஜான் டிராஸிக் 72-ஆவது நிமிஷத்திலும் ஸ்கோா் செய்தனா்.

இந்த வெற்றியின் மூலம் கோவா அணி, ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் சாம்பியன்ஸ் லீக் 2 போட்டியின் தொடக்க சுற்றுக்கு தகுதிபெற்றது.

இதற்கு முன், 2021-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியின் குரூப் சுற்றில் கோவா விளையாடியிருக்கிறது. சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில், இந்தியன் சூப்பா் லீக் மற்றும் ஐ லீக் போட்டியைச் சோ்ந்த 16 அணிகள் களம் காண்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.