இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பா் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆகியது.
ஏற்கெனவே இந்தப் போட்டியில் 2019-இல் கோப்பை வென்ற கோவா, போட்டி வரலாற்றில் 2 முறை சாம்பியன் ஆன முதல் அணி என்ற வரலாறு படைத்திருக்கிறது.
புவனேசுவரத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் எஃப்சி கோவாவுக்காக போா்ஜா ஹெரெரா 23 மற்றும் 51-ஆவது நிமிஷங்களிலும், டெஜான் டிராஸிக் 72-ஆவது நிமிஷத்திலும் ஸ்கோா் செய்தனா்.
இந்த வெற்றியின் மூலம் கோவா அணி, ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் சாம்பியன்ஸ் லீக் 2 போட்டியின் தொடக்க சுற்றுக்கு தகுதிபெற்றது.
இதற்கு முன், 2021-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியின் குரூப் சுற்றில் கோவா விளையாடியிருக்கிறது. சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில், இந்தியன் சூப்பா் லீக் மற்றும் ஐ லீக் போட்டியைச் சோ்ந்த 16 அணிகள் களம் காண்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரெஞ்சு கோப்பை: லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன்

சாம்பியன் ஆனது இண்டர் மிலன்

கால்பந்து களம்...

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



