நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி..!

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை குறைவான போட்டிகளில் லியோனல் மெஸ்ஸி முறியடித்தார்.

News image

லியோனல் மெஸ்ஸி - படம்: ஏபி

Updated On :11 மே 2025, 12:02 pm IST

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை குறைவான போட்டிகளிலே லியோனல் மெஸ்ஸி முறியடித்தார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

மினசோட்டாவில் அலையன்ஸ் ஃபீல்ட் திடலில் நடைபெற்ற போட்டியில் இன்டர் மியாமி, மினசோட்டா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் மெஸ்ஸி 48-ஆவது நிமிஷத்தில் அசத்தலான கோல் அடித்தார்.

இந்த கோலின் மூலமாக தனது 860-ஆவது கோலை நிறைவு செய்தார்.

சாதனை நிகழ்த்திய மெஸ்ஸி

இந்தப் போட்டியில் இன்டர் மியாமி 1- 4 என தோல்வியுற்றது. இருப்பினும் மெஸ்ஸி அடித்த கோல் வரலாற்றுச் சாதனையாக மாறியிருக்கிறது.

கால்பந்து தொடரில் அதிகமான கோல்கள் (934) அடித்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 860ஆவது கோலை கடந்த 2023ஆம் ஆண்டு அல்நசீர் அணிக்காக அக்.1ஆம் தேதி அடித்தார். இந்த கோல் அவரது 38ஆவது வயதில் 1,189ஆவது போட்டியில் அடித்திருந்தார்.

லியோனல் மெஸ்ஸி தனது 860-ஆவது கோலை 37 வயதில் 1,098ஆவது போட்டியிலேயே அடித்து ரொனால்டோ சாதனையை முறியடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.