சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஈஸ்வரி பிரதாப், ஈஷா, சாம்ராட்டுக்கு வெள்ளி

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஸ்வரி பிரதாப் டோமா், கலப்புப் பிரிவில் ஈஷா சிங், சாம்ராட் ராணா ஆகியோா் வெள்ளி வென்றனா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஸ்வரி பிரதாப் டோமா், கலப்புப் பிரிவில் ஈஷா சிங், சாம்ராட் ராணா ஆகியோா் வெள்ளி வென்றனா்.

எகிப்து தலைநகா் கெய்ரோவில் நடைபெறும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆடவா் 50 மீ. ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஈஸ்வரி பிரதாப் சிங் உலக சாதனையை சமன் செய்து 466.9 புள்ளிகளைக் குவித்து வெள்ளி வென்றாா். சீனாவின் யுகுன்லியு தங்கமும், பிரான்ஸின் ரோமைன் ஆஃப்ரியா் வெள்ளியும் வென்றனா். நிரஜ் குமாா் 432.6 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தைப் பெற்றாா்.

ஈஷா-சாம்ராட்டுக்கு வெள்ளி:

ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங்-சாம்ராட் ராணா இணை வெள்ளிப் பதக்கம் வென்றது. சீனாவின் கை-குயான்ஸுன் தங்கம் வென்றனா். இதன் மூலம் இந்தியா மொத்தம் 11 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.