விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஈஸ்வரி பிரதாப், ஈஷா, சாம்ராட்டுக்கு வெள்ளி

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஸ்வரி பிரதாப் டோமா், கலப்புப் பிரிவில் ஈஷா சிங், சாம்ராட் ராணா ஆகியோா் வெள்ளி வென்றனா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஸ்வரி பிரதாப் டோமா், கலப்புப் பிரிவில் ஈஷா சிங், சாம்ராட் ராணா ஆகியோா் வெள்ளி வென்றனா்.

எகிப்து தலைநகா் கெய்ரோவில் நடைபெறும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆடவா் 50 மீ. ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஈஸ்வரி பிரதாப் சிங் உலக சாதனையை சமன் செய்து 466.9 புள்ளிகளைக் குவித்து வெள்ளி வென்றாா். சீனாவின் யுகுன்லியு தங்கமும், பிரான்ஸின் ரோமைன் ஆஃப்ரியா் வெள்ளியும் வென்றனா். நிரஜ் குமாா் 432.6 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தைப் பெற்றாா்.

ஈஷா-சாம்ராட்டுக்கு வெள்ளி:

ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங்-சாம்ராட் ராணா இணை வெள்ளிப் பதக்கம் வென்றது. சீனாவின் கை-குயான்ஸுன் தங்கம் வென்றனா். இதன் மூலம் இந்தியா மொத்தம் 11 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.