எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

லக்ஷயா, பிரணய் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், ஹெச்.எஸ்.பிரணய் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், ஹெச்.எஸ்.பிரணய் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

ஆடவர் ஒற்றையரில், லக்ஷயா சென் 21-17, 21-13 என்ற வகையில், சீன தைபேவின் சு லி யாங்கை வென்றார்.

தருண் மன்னெபள்ளி 21-13, 17-21, 21-19 என்ற கணக்கில், டென்மார்க்கின் மேக்னஸ் ஜோஹன்னசனை வீழ்த்த, கே.ஸ்ரீகாந்த் 21-19, 19-21, 21-15 என்ற கேம்களில் சீன தைபேவின் லீ சியா ஹாவை வெளியேற்றினார்.

ஹெச்.எஸ்.பிரணய் 6-21, 21-12, 21-17 என்ற வகையில், இந்தோனேசியாவின் யோஹனிஸ் மார்செலினோவை வென்றார். ஆயுஷ் ஷெட்டி 21-11, 21-15 என்ற கேம்களில் கனடாவின் சாம் யுவானை சாய்த்தார். எனினும், கிரண் ஜார்ஜ் 21-11, 22-24, 17-21 என்ற கேம்களில், ஜப்பானின் கென்டா நிஷிமோடோவிடம் தோல்வி கண்டார்.

கலப்பு இரட்டையரில், மோஹித் ஜக்லன், லக்ஷிதா ஜக்லன் இணை தோல்வியைத் தழுவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.