தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிற்கு தேர்வான கோவென்ட்ரி சிட்டி!

பிரீமியர் லீக் கால்பந்து போட்டிக்குத் தேர்வான கோவென்ட்ரி சிட்டி கால்பந்து அணி குறித்து...

Coventry City players celebrate sealing the league title following the EFL Championship soccer match between Coventry City and Portsmouth, Tuesday, April 21, 2026 in Coventry, England. (Mike Egerton/PA via AP)

வெற்றிக் களிப்பில் கோவென்ட்ரி சிட்டி அணியினர். - படம்: ஏபி

Published On :

இங்கிலாந்தின் முதல்தர கால்பந்து போட்டியான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிக்கு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வாகி கோவென்ட்ரி சிட்டி சாதனை படைத்துள்ளது.

இரண்டாம் டிவிஷன் கால்பந்து போட்டியான இஎஃப்எல் சாம்பியன்ஷிப்பை வென்று, பிரீமியர் லீக்கிற்கு தேர்வாகியுள்ளது. கடைசியாக இந்த அணி, 2000-2001 சீசனில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இஎஃப்எல் சாம்பியன்ஷிப்பிற்கு மீதம் 2 போட்டிகள் இருக்கும் நிலையில் 44 போட்டிகளிலேயே தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.

போர்ட்ஸ்மவுத் அணியுடன் இன்று மோதிய கோவென்ட்ரி சிட்டி 5- 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியாக 9,113 நாள்களுக்கு முன்னதாக இந்த அணி ஆஸ்டன் வில்லா அணியினால் தோற்கடிக்கப்பட்டது.

அடுத்த 2026-27 பிரீமியர் லீக் சீசனில் கோவென்ட்ரி சிட்டி பங்கேற்கவிருக்கிறது. இதனால், அணியின் சொத்து மதிப்பு 220 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளதாக கால்பந்து நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Summary

Coventry City earned Premier League return after 25 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.