பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிற்கு தேர்வான கோவென்ட்ரி சிட்டி!

பிரீமியர் லீக் கால்பந்து போட்டிக்குத் தேர்வான கோவென்ட்ரி சிட்டி கால்பந்து அணி குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் கோவென்ட்ரி சிட்டி அணியினர். - படம்: ஏபி

Updated On :22 ஏப்ரல் 2026, 9:39 am

இங்கிலாந்தின் முதல்தர கால்பந்து போட்டியான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிக்கு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வாகி கோவென்ட்ரி சிட்டி சாதனை படைத்துள்ளது.

இரண்டாம் டிவிஷன் கால்பந்து போட்டியான இஎஃப்எல் சாம்பியன்ஷிப்பை வென்று, பிரீமியர் லீக்கிற்கு தேர்வாகியுள்ளது. கடைசியாக இந்த அணி, 2000-2001 சீசனில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இஎஃப்எல் சாம்பியன்ஷிப்பிற்கு மீதம் 2 போட்டிகள் இருக்கும் நிலையில் 44 போட்டிகளிலேயே தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.

போர்ட்ஸ்மவுத் அணியுடன் இன்று மோதிய கோவென்ட்ரி சிட்டி 5- 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியாக 9,113 நாள்களுக்கு முன்னதாக இந்த அணி ஆஸ்டன் வில்லா அணியினால் தோற்கடிக்கப்பட்டது.

அடுத்த 2026-27 பிரீமியர் லீக் சீசனில் கோவென்ட்ரி சிட்டி பங்கேற்கவிருக்கிறது. இதனால், அணியின் சொத்து மதிப்பு 220 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளதாக கால்பந்து நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Summary

Coventry City earned Premier League return after 25 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.