இங்கிலாந்தின் முதல்தர கால்பந்து போட்டியான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிக்கு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வாகி கோவென்ட்ரி சிட்டி சாதனை படைத்துள்ளது.
இரண்டாம் டிவிஷன் கால்பந்து போட்டியான இஎஃப்எல் சாம்பியன்ஷிப்பை வென்று, பிரீமியர் லீக்கிற்கு தேர்வாகியுள்ளது. கடைசியாக இந்த அணி, 2000-2001 சீசனில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஎஃப்எல் சாம்பியன்ஷிப்பிற்கு மீதம் 2 போட்டிகள் இருக்கும் நிலையில் 44 போட்டிகளிலேயே தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.
போர்ட்ஸ்மவுத் அணியுடன் இன்று மோதிய கோவென்ட்ரி சிட்டி 5- 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியாக 9,113 நாள்களுக்கு முன்னதாக இந்த அணி ஆஸ்டன் வில்லா அணியினால் தோற்கடிக்கப்பட்டது.
அடுத்த 2026-27 பிரீமியர் லீக் சீசனில் கோவென்ட்ரி சிட்டி பங்கேற்கவிருக்கிறது. இதனால், அணியின் சொத்து மதிப்பு 220 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளதாக கால்பந்து நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Summary
Coventry City earned Premier League return after 25 years.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









