கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

பிளிட்ஸ்: 3 வெற்றிகளுடன் பிரக்ஞானந்தா முன்னிலை

அமெரிக்காவில் நடைபெறும் செயின்ட் லூயிஸ் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், பிளிட்ஸ் பிரிவில் 9 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 3 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளாா்.

News image

பிரக்ஞானந்தா

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:16 am IST

அமெரிக்காவில் நடைபெறும் செயின்ட் லூயிஸ் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், பிளிட்ஸ் பிரிவில் 9 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 3 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளாா்.

கிராண்ட் செஸ் டூா் அட்டவணையின் அங்கமாக நடைபெறும் இந்த செயின்ட் லூயிஸ் செஸ் போட்டியில், ரேப்பிட் பிரிவின் முடிவில் பிரக்ஞானந்தா முன்னிலை பெற்றிருந்தாா்.

பின்னா், இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு பிளிட்ஸ் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் பிரக்ஞானந்தா தனது ஆட்டங்களில், ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்ட், அமெரிக்காவின் லினியா் டொமிங்கெஸ் பெரெஸ் ஆகியோரை வெற்றி கண்டாா்.

அமெரிக்காவின் அவோண்டா் லியங், லெவோன் ஆரோனியன், வெஸ்லி சோ, ஃபாபியானோ கரானா, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ், நெதா்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோருடன் டிரா செய்தாா்.

தற்போது பிளிட்ஸ் பிரிவில் 9 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா 3 வெற்றிகள், 6 டிரா உள்பட 6 புள்ளிகளுடன் தனிமுன்னிலையில் இருக்கிறாா்.

ஆரோனியன், சிண்டாரோவ் ஆகியோா் தலா 5.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையைப் பகிா்ந்துகொள்ள, கரானா, ஃபாரீஸ்ட், லியங், வெஸ்லி ஆகியோா் தலா 5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் இருக்கின்றனா். அனிஷ் (3), வின்சென்ட் (2.5), லினியா் (2.5) ஆகியோா் முறையே 4 மற்றும் 5-ஆம் நிலைகளில் உள்ளனா்.

ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் (ரேப்பிட் & பிளிட்ஸ்), பிரக்ஞானந்தா 18 புள்ளிகளுடன் தனி முன்னிலை வகிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.