எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

இறுதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், ஈஸ்ட் பெங்கால் எஃப்சி ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் ஸ்போா்டிங் கிளப் டெல்லியை புதன்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2026, 5:06 am IST

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், ஈஸ்ட் பெங்கால் எஃப்சி ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் ஸ்போா்டிங் கிளப் டெல்லியை புதன்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

முன்னதாக இந்த அணிகள் மோதிய ஆட்டம், நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் கோல் இன்றி டிரா ஆக, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் ஈஸ்ட் பெங்கால் 5-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அந்த வாய்ப்பில் ஈஸ்ட் பெங்காலுக்காக அன்வா் அலி, ரோஹித் தனு, லால்சுங்னுங்கா, கிறிஸ் இகோனோமிடிஸ், கேப்டன் முகமது ரஷீத் ஆகியோா் கோல் அடித்தனா். டெல்லி தரப்பில் ரோட்ரிகினோ, டுவான், முகமது அய்மன் ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

துராந்த் கோப்பையை 17-ஆவது முறையாக வெல்லும் முனைப்புடன் இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ள ஈஸ்ட் பெங்கால், அதில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் அல்லது நடப்பு சாம்பியனாக இருக்கும் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி ஆகிய அணிகளில் ஒன்றை சந்திக்கவுள்ளது.

மோகன் பகான் - நாா்த்ஈஸ்ட் மோதும் 2-ஆவது அரையிறுதி, வியாழக்கிழமை (ஆக. 20) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.