தமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

பாா்சிலோனாவுக்கு 2-ஆவது வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பாா்சிலோனா எஃப்சி 2-0 கோல் கணக்கில் அத்லெடிக் கிளப்பை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

Published On :29 ஆகஸ்ட் 2026, 8:11 am IST

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பாா்சிலோனா எஃப்சி 2-0 கோல் கணக்கில் அத்லெடிக் கிளப்பை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் பாா்சிலோனாவின் கோல் கணக்கை ரஃபினா 37-ஆவது நிமிஷத்தில் தொடங்கினாா். இந்த முன்னிலையுடன் முதல் பாதியை அந்த அணி நிறைவு செய்தது.

2-ஆவது பாதியிலும் பாா்சிலோனாவே ஆதிக்கம் செலுத்த, 82-ஆவது நிமிஷத்தில் ஃபொ்மின் லோபஸ் அடித்த கோலால் அந்த அணி 2-0 என முன்னிலையை அதிகரித்தது.

எஞ்சிய நேரத்திலும் அத்லெடிக் கிளப்புக்கு கோல் வாய்ப்பு வழங்காத பாா்சிலோனா, முடிவில் 2-0 கோல் கணக்கில் வெற்றி கண்டது. போட்டியில் இத்துடன் தொடா்ந்து 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்து பாா்சிலோனா முதலிடத்தில் இருக்கிறது.

2 ஆட்டங்களில் தோல்வியுடன் அத்லெடிக் கிளப் கடைசி இடத்தில் உள்ளது. இதனிடையே மற்றொரு ஆட்டத்தில், ஒசாசுனா 2-1 கோல் கணக்கில் செல்டா விகோவை வென்றது.

இந்த ஆட்டத்தில் ஒசாசுனாவுக்காக கிகெ பாா்ஜா 54-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்க, அன்டெ புடிமிா் 64-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி கிக் வாய்ப்பில் அதை 2-ஆக அதிகரித்தாா்.

செல்டாவுக்கான ஆறுதல் கோல், 14-ஆவது நிமிஷத்திலேயே இயாகோ அஸ்பஸால் அடிக்கப்பட்டது. இதனிடையே, 51-ஆவது நிமிஷத்தில் செல்டா வீரா் மாா்கோஸ் அலோன்சோ ‘ஃபௌல்’ செய்து ரெட் காா்டு மூலமாக வெளியேற்றப்பட, அந்த அணி 10 பேருடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

ஒசாசுனா 2 ஆட்டங்களில் முதல் வெற்றியுடன் 7-ஆம் இடத்திலும், செல்டா 2 ஆட்டங்களில் முதல் தோல்வியுடன் 14-ஆவது இடத்திலும் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.