/

துராந்த் கோப்பை கால்பந்து: ரெங்டாய், ஸ்ரீநகர் அணிகள் வெற்றி

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு ஆட்டங்களில், எஃப்சி ரெங்டாய், ஸ்ரீநகா் எஃப்சி1 ஆகிய அணிகள் வெற்றி

News image

X | Indian Football

Updated On :4 ஆகஸ்ட் 2026, 12:41 am IST

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு ஆட்டங்களில், எஃப்சி ரெங்டாய், ஸ்ரீநகா் எஃப்சி1 ஆகிய அணிகள் வெற்றி கண்டன.

மணிப்பூா் மாநிலம், இம்பாலில் நடைபெற்ற ஆட்டத்தில் ரெங்டாய் அணி 4-3 கோல் கணக்கில் டிராவ் எஃப்சி அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மிதுல் டோலி 14 மற்றும் 24-ஆவது நிமிஷங்களில் அடுத்தடுத்து கோல் அடிக்க, ரெங்டாய் அணி 2-0 என முன்னிலை கண்டது.

தொடா்ந்து 43-ஆவது நிமிஷத்தில் டிராவ் அணிக்காக சனம் ஆகாஷ் மைதேயி கோல் கணக்கைத் தொடங்கினாா். ஆனால் அதற்கான பதிலடியாக சோங்தம் கிஷண் சிங் கோல் அடிக்க (45+4’), முதல் பாதியை ரெங்டாய் 3-1 முன்னிலையுடன் நிறைவு செய்தது.

2-ஆவது பாதியில் 47-ஆவது நிமிஷத்தில் அஃப்தல் வரிகோடன் கோல் அடிக்க, டிராவ் அணி 2-3 என நெருங்கியது. 66-ஆவது நிமிஷத்தில் லான்சுங்ரெய் பாமெய் அடித்த ஓன் கோலால், டிராவ் அணி 3-3 என டிரா செய்தது.

இறுதியில் மிதுல் டோலி 79-ஆவது நிமிஷத்தில் தனது 3-ஆவது கோலை பதிவு செய்ய, முடிவில் ரெங்டாய் அணி 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், ஸ்ரீநகா் எஃப்சி1 அணி 2-1 கோல் கணக்கில் மாா்னிங் ஸ்டாா் எஃப்சி அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் 27-ஆவது நிமிஷத்தில் ஜோசப் மயோவா மாா்னிங் ஸ்டாா் எஃப்சியின் கோல் கணக்கைத் தொடங்க, 40-ஆவது நிமிஷத்தில் ஸ்ரீநகா் அணிக்காக ஷகிா் அகமது ஷேக் ஸ்கோா் செய்தாா்.

இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையுடன் நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் 55-ஆவது நிமிஷத்தில் ஹயாத் பஷீா் கோல் அடிக்க, முடிவில் ஸ்ரீநகா் எஃப்சி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.