ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

முகமதனை வீழ்த்தியது சமலேஸ்வரி!

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் சமலேஸ்வரி எஸ்சி அணி 3-2 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

Durand Cup: Samaleswari stuns Mohammedan SC

முகமதனை வீழ்த்தியது சமலேஸ்வரி - X | Indian Football

Published On :

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் சமலேஸ்வரி எஸ்சி அணி 3-2 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

அந்த அணி 3-ஆவது ஆட்டத்தில் 2-ஆவது வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்க, முகமதன் அணி 2-ஆவது ஆட்டத்தில் முதல் தோல்வியைச் சந்தித்து 2-ஆவது இடத்தில் உள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் சமலேஸ்வரி அணிக்காக பாசித் அகமது பாட் 11-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, மாரத் தாரெக் 27-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா்.

இதனால் முதல் பாதியை சமலேஸ்வரி அணி 2-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் மீண்ட முகமதன் அணிக்காக, லால்தங்கிமா கியாங்தே 60-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா்.

பின்னா் 66-ஆவது நிமிஷத்தில் லால்காய்சகா கிஸோ அதை 2-ஆக அதிகரிக்க, ஆட்டம் 2-2 என சமநிலை கண்டது. இந்நிலையில் 81-ஆவது நிமிஷத்தில் வீா் அா்ஜுன் ஜோஷி கோல் அடிக்க, சமலேஸ்வரி அணி 3-2 என முன்னிலை கண்டது.

எஞ்சிய நேரத்தில் முகமதன் அணிக்கு கூடுதல் கோல் வாய்ப்பு கொடுக்காமல், முடிவில் சமலேஸ்வரி அணியே வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.