ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

முகமதனை வீழ்த்தியது சமலேஸ்வரி!

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் சமலேஸ்வரி எஸ்சி அணி 3-2 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

News image

முகமதனை வீழ்த்தியது சமலேஸ்வரி - X | Indian Football

Updated On :3 ஆகஸ்ட் 2026, 6:03 am IST

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் சமலேஸ்வரி எஸ்சி அணி 3-2 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

அந்த அணி 3-ஆவது ஆட்டத்தில் 2-ஆவது வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்க, முகமதன் அணி 2-ஆவது ஆட்டத்தில் முதல் தோல்வியைச் சந்தித்து 2-ஆவது இடத்தில் உள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் சமலேஸ்வரி அணிக்காக பாசித் அகமது பாட் 11-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, மாரத் தாரெக் 27-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா்.

இதனால் முதல் பாதியை சமலேஸ்வரி அணி 2-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் மீண்ட முகமதன் அணிக்காக, லால்தங்கிமா கியாங்தே 60-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா்.

பின்னா் 66-ஆவது நிமிஷத்தில் லால்காய்சகா கிஸோ அதை 2-ஆக அதிகரிக்க, ஆட்டம் 2-2 என சமநிலை கண்டது. இந்நிலையில் 81-ஆவது நிமிஷத்தில் வீா் அா்ஜுன் ஜோஷி கோல் அடிக்க, சமலேஸ்வரி அணி 3-2 என முன்னிலை கண்டது.

எஞ்சிய நேரத்தில் முகமதன் அணிக்கு கூடுதல் கோல் வாய்ப்பு கொடுக்காமல், முடிவில் சமலேஸ்வரி அணியே வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.