/

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா முன்னேறியது.

News image

ஆர்ஜென்டீனா

Updated On :16 ஜூலை 2026, 3:31 am IST

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா முன்னேறியது.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா - இங்கிலாந்து அணிகள் புதன்கிழமை மோதின. அமெரிக்​கா​வின் மெர்​சிடீஸ் பென்ஸ் திடலில் அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதி சூடு பிடித்தது. இரண்டு அணிகளும் கோல் அடிக்க பல முயற்சிகள் மேற்கொண்டன. ஆட்டத்தின் 55-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் கோர்டான் கோல் கணக்கைத் தொடங்கினார். இதனால், இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது.

பதிலுக்கு ஆட்டத்தின் இறுதியில் 85-ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவும் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. தொடர்ந்து ஆட்டத்தின் 90-ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா தனது இரண்டாவது கோலை அடித்தது. இதனால், ஆர்ஜென்டீனா அணி 2-1 என முன்னிலை வகித்தது.

இதன்பிறகு இரண்டு அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. ஆட்டத்தின் இறுதிவரை இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஆர்ஜென்டீனா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

வரும் திங்கள்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை ஆர்ஜென்டீனா எதிர்கொள்கிறது.

Summary

Messi inspired Argentina's dramatic comeback, setting up Enzo Fernández's 85th-minute equaliser before crossing for Lautaro Martínez's stoppage-time winner against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.