ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-வது இடத்துக்கான போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இங்கிலாந்து - பிரான்ஸ் அணிகள் மோதிய இப்போட்டியில் 6-4 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது.
பிரான்ஸ் அணிக்கு அதிகபட்சமாக கிலியன் எம்பாப்பே இரு கோல்கள் அடித்து அசத்தினார்.
இப்போட்டியில் அடித்த இரு கோல்கள் மூலம் அவர் ஆர்ஜென்டீனாவின் நட்சத்திர வீரரான மெஸ்ஸியுடன் சமன் செய்திருந்த ‘உலகக்கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த வீரர்’ என்ற சாதனையை முந்தி 22 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
மேலும், ஒரே உலகக் கோப்பை போட்டியில் 10 கோல்கள் அடித்து மெஸ்ஸியின் 8 கோல்கள் அடித்த சாதனையையும் அவர் முறியடித்து முன்னேறியுள்ளார். இதன்மூலம், இந்தாண்டுக்கான கோல்டன் பூட் விருதை எம்பாப்பே பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அடிக்கும் கோல்களைப் பொறுத்தே அமையும்.
அவ்வாறு, கோல்டன் பூட் விருதை எம்பாப்பே வென்றால் தொடர்ந்து இருமுறை அவ்விருதைப் பெற்ற சாதனையையும் அவர் படைப்பார்.
கத்தாரில் நடைபெற்ற 2022 உலகக்கோப்பை தொடரில் 8 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை எம்பாப்பே பெற்றிருந்தார்.
அவர் இந்தத் தொடரில் அடித்துள்ள 10 கோல்கள், ஒரு தொடரில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச கோல்கள் ஆகும். முதலிடத்தில் பிரான்ஸ் வீரர் ஜஸ்ட் ஃபவுண்டைன் 1958-ல் அடித்த 13 கோல்கள் உள்ளது.
இரண்டாமிடத்தில் மேற்கு ஜெர்மனி வீரர் கெர்ட் முல்லர் 1970-ல் அடித்த 10 கோல்களும் உள்ளன. இதனை, எம்பாப்பே சமன் செய்துள்ளார்.
Summary
French player Mbappé has set a record for scoring the most goals in the World Cup tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











