பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

உலகக் கோப்பை: 56 ஆண்டுகால பீலேவின் சாதனையை முறியடித்த ஒலிஸே!

கால்பந்து உலகக் கோப்பையில் பீலேவின் சாதனையை முறியடித்த பிரான்ஸ் வீரர் குறித்து...

News image

பிரான்ஸ் வீரர் மைக்கேல் ஒலிஸே. - படம்: ஏபி

Updated On :19 ஜூலை 2026, 4:40 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் 56 ஆண்டுகாலமாக இருந்த பீலேவின் சாதனையை பிரான்ஸ் வீரர் மைக்கேல் ஒலிஸே (24 வயது) முறியடித்துள்ளார்.

உலகக் கோப்பையின் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் பிரான்ஸை 6-4 என வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கல பதக்கம் வென்றது.

இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி தோற்றாலும் அதன் வீரர்கள் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள். எம்பாபே அதிக கோல் அடித்தவராக சாதனை படைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், இந்தப் போட்டியில் மைக்கேல் ஒலிஸே 48, 66ஆவது நிமிஷத்தில் 2 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தினார். இந்த 2 அசிஸ்ட்டுகளைச் செய்ததன் மூலமாக பீலேவின் 56 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பீலே 6 அசிஸ்ட்டுகளை செய்து முதலிடத்தில் இருந்தார். கடைசி போட்டியில் ஒலிஸே 2 அசிஸ்டுகளை அடித்து மொத்தமாக இந்த உலகக் கோப்பையில் மட்டுமே 7 அசிஸ்ட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

மெக்சிகோவில் 1970 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பீலே 6 அசிஸ்டுகளை செய்து சாதனை படைத்திருந்தார்.

Summary

Michael Olise Breaks 56-Year World Cup Assist Record at FIFA World Cup 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.