புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

எகிப்துடன் டிரா செய்த பெல்ஜியம்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ஃபிஃபா தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் பெல்ஜியம் 1-1 கோல் கணக்கில், 29-ஆம் இடத்திலிருக்கும் எகிப்துடன் டிரா செய்தது.

News image
Updated On :17 ஜூன் 2026, 4:51 am IST

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ஃபிஃபா தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் பெல்ஜியம் 1-1 கோல் கணக்கில், 29-ஆம் இடத்திலிருக்கும் எகிப்துடன் டிரா செய்தது.

இந்த ஆட்டத்தில் 7-ஆவது நிமிஷத்தில் பெல்ஜிய வீரர் கெவின் டி புருயினின் கோல் முயற்சி வைடாக சென்று வீணானது. பெல்ஜியத்துக்கான அதிர்ச்சியாக, முதலில் எகிப்து அணியே கோல் அடித்தது. 19-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் இமாம் அஷுர் தனது முதல் சர்வதேச கோலை பதிவு செய்தார்.

முதல் பாதி முழுவதுமாகவே ஆக்ரோஷமாக விளையாடிய எகிப்து அணி, முன்னிலையுடன் அதை நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் 53-ஆவது நிமிஷத்தில் கெவின் டி புருயினின் மற்றொரு கோல் முயற்சியும் வீணானது.

எகிப்து தனது முதல் உலகக் கோப்பை வெற்றியை நோக்கி முன்னேறியதாகத் தெரிந்தது. ஆனால் அது 66-ஆவது நிமிஷம் வரையே நீடித்தது. அப்போது சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கிய பெல்ஜிய வீரர் ரொமேலு லுகாகுவுக்கு, அந்நாட்டு ரசிகர்கள் எழுந்து நின்று உற்சாகமளிக்க, அந்த நிமிஷத்திலேயே கோல் அடித்தார் அவர். எகிப்தின் முகமது ஹேனி அதை தடுக்க முயல, அது "ஓன் கோல்'-ஆக மாறியது.

இதனால் உற்சாகமடைந்த பெல்ஜிய அணியினர் அடுத்த கோல் வாய்ப்புக்கு முயல, எகிப்து இடம் தரவில்லை. ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. எகிப்துக்காக கோலடித்த இமாம் அஷுர் ஆட்டநாயகன் ஆனார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.