எஃப்ஐஎச் நேஷன்ஸ் மகளிா் ஹாக்கிப் போட்டியில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. அரையிறுதியி்ல சிலியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) சாா்பில் நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் 8 நாடுகள் பங்கேற்றுள்ள நேஷன்ஸ் ஹாக்கிப் போட்டி நடைபெறுகிறது. உலகக் கோப்பை, ஆசியப் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இப்போட்டியில் ஆடி வருகிறது.
குரூப் ஏ பிரிவில் 3 வெற்றிகளுடன் முதலிடம் பெற்ற இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சிலியுடன் மோதியது இந்தியா. தொடக்கம் முதலே இந்திய மகளிா் ஆதிக்கம் செலுத்தினா். சிலியும் அவ்வப்போது பந்தை வசப்படுத்த போராடியது.
ஆட்டம் தொடங்கிய 6-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. நவ்நீத் கௌா் அதை பிசகின்றி கோலாக்கினாா். 13-ஆவது நிமிஷத்தில் கேப்டன் சலீமா டெட் அனுப்பிய கிராஸ் பாஸை பயன்படுத்தி தனது இரண்டாவது கோலை பதிவு செய்தாா் நவ்நீத் கௌா்.
14 மற்றும் 18-ஆவது நிமிஷங்களில் இந்தியாவின் டிராக்பிளிக்கா் தீபிகா அபாரமாக கோலடித்து 4-0 என முன்னிலை பெற்றுத் தந்தாா்.
இரண்டாம் பாதியிலும் இந்தியாவின் அதிரடிக்கு சிலியால் பதில் தர முடியவில்லை. 32-ஆவது நிமிஷத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி காா்னரை கோலாக்கினாா் நேஹா.
ருதுஜா பிஸல் 39-ஆவது நிமிஷத்தில் ரிவா்ஸ் ஹிட் மூலம் 6-ஆவது கோலை அடித்தாா்.
கடைசி குவாா்ட்டரில் சிலி வீராங்கனைகள் கோலடிக்க முயன்றதை அரண்போல் நின்று தடுத்தாா் இந்தியாவின் கோலி சவீதா.
இதன் மூலம் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.
டிராக்பிளிக்கா் தீபிகா போட்டியில் இதுவரை 6 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










