இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

நாா்த் ஈஸ்ட் அணிக்கு பதிலடி தரும் முனைப்பில் சென்னையின் எஃப்சி

நாா்த் ஈஸ்ட் அணிக்கு பதிலடி தரும் முனைப்பில் சென்னையின் எஃப்சி

News image

பயிற்சியில் சென்னை வீரா்கள்.

Updated On :10 மே 2026, 2:15 am IST

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் பகுதியாக நடைபெறவுள்ள ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு பதிலடி தர தயாராக உள்ளது சென்னையின் எஃப்சி அணி.

ஏற்கெனவே சென்னையில் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட ஆட்டம் குவஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில் சென்னை அணி இந்த சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளது. இரு அணிகளும் 24 முறை மோதியதில் சென்னை 11 முறை வென்றுள்ளது. நாா்த் ஈஸ்ட் 8 முறை வென்றது.

சென்னை அணி பயிற்சியாளா் கிளிஃப்போா்ட் மிரண்டா கூறியது: இரு அணிகளும் 3 புள்ளிகளை முழுமையாக ஈட்ட போராடும்.

நாா்த் ஈஸ்ட் அணி பல்வேறு வகைகளில் ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்க போராடுவா். பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளது.

முந்தைய ஆட்டத்தில் எதிா்பாராத வகையில் சொந்த கோலால் நாம் தோற்றோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் கடைசி 15 நிமிஷங்கள் கடும் போராட்டமாக உள்ளது. அணியில் யாருக்கும் காயம் ஏதுமில்லை என்றாா்.