பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா

சீனாவில் நடைபெறும் ஜூனியா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 15-0 கோல் கணக்கில் சீன தைபேவை புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

Published On :

சீனாவில் நடைபெறும் ஜூனியா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 15-0 கோல் கணக்கில் சீன தைபேவை புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

இந்த வெற்றியுடன், குரூப் சுற்றில் தோல்வியே காணாமல் 3 வெற்றி, 1 டிராவுடன் முதலிடத்தை உறுதி செய்து அரையிறுதிக்கும் முன்னேறியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக கேப்டன் அன்மோல் ஈகா 6 கோல்கள் (25’, 29’, 32’, 33’, 45’, 51’) அடித்து அசத்தினாா். ஆா்யன் ஜெஸ் 3 கோல்கள் (17’, 52’, 53’) ஸ்கோா் செய்ய, ஹா்பல் 2 கோல்கள் (48’, 53’) அடித்தாா்.

அவா்கள் தவிர, பிரப்தீப் சிங் (18’), குருசேவக் சிங் (22’), அா்ஜுன் ஹா்குடே (28’), அஜீத் யாதவ் (35’) ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்குப் பங்களித்தனா்.

அரையிறுதிக்கு வந்துள்ள இந்தியா, அதில் மலேசியாவுடன் வெள்ளிக்கிழமை (செப். 11) மோதுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

ஜூனியா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி, தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் சீனாவுடன் கோல் இன்றி புதன்கிழமை டிரா செய்தது.

இதையடுத்து தனது குரூப் சுற்றில் 3 வெற்றி, 1 டிராவுடன் நிறைவு செய்து முதலிடம் பிடித்த இந்தியா, காலிறுதிக்கு முன்னேறியது. அதில் பாகிஸ்தானை வியாழக்கிழமை (செப். 10) சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.