
அதிவேகமாக 100 கோல்கள்: எம்எல்எஸ் தொடரில் வரலாறு படைத்த லியோ மெஸ்ஸி!
எம்எல்எஸ் தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி குறித்து...

ஆட்ட நாயகன் விருதுடன் லியோனல் மெஸ்ஸி - படம்: ஏபி
அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் அதிவேகமாக 100 கோல்கள் அடித்தவராக இன்டர் மியாமி அணியின் லியோனல் மெஸ்ஸி (39 வயது) வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இன்டர் மியாமி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்று முதல்முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது.
எம்எல்எஸ் மற்றும் லிகா எம்எக்ஸ் சாம்பியன்களுக்கு இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் க்ரூஸ் அஜுல் அணி எதிராக இன்டர் மியாமி தனது சொந்த மண்ணில் மோதியது.
இந்தப் போட்டியில் ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்து அசத்தினார். ஆட்ட நாயகன் வென்ற மெஸ்ஸி, எம்எல்எஸ் தொடரின் வரலாற்றிலேயே அதிவேகமாக 100 கோல்கள் அடித்தவராக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக எம்எல்எஸ் தொடரில் 125 போட்டிகளில் ஜோசப் மார்டினெஸ் 100 கோல்களை அடித்திருந்தார். இன்டர் மியாமிக்காக மெஸ்ஸி 115 போட்டிகளில் 100 கோல்கள், 56 அசிஸ்ட்டுகளை செய்து அசத்தியுள்ளார்.
மொத்தமாக இதுவரை லியோனல் மெஸ்ஸி 929 கோல்கள், 424 அசிஸ்ட்டுகளை செய்து அசத்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மெஸ்ஸி கடைசியாக ஒருமுறை தேசிய அணியில் விளையாடவிருப்பதாக நேற்று (செப்.16) அறிவிக்கப்பட்டது.
ð¨ð¨| ðððððð: Lionel Messi becomes the Fastest MLS Player to reach 100 Goals in All Competitions:
— Inter Miami News Hub (@Intermiamicfhub) September 17, 2026
ð¥ Lionel Messi (115 Games) ðï¸ ð
ð¥ Josef Martinez (125 Games) pic.twitter.com/sXfGjlI9dX
Summary
Fastest to 100 goals: Lionel Messi makes history in the MLS!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








