ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள்: 'கில்லர்' மில்லர் மிரட்டலில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது. 

News image
Updated On :30 அக்டோபர் 2021, 1:57 pm

DIN


இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது. 

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசன்கா 58 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறியது இலங்கை பேட்டிங்கில் பின்னடைவை ஏற்படுத்தியது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் தப்ரைஸ் ஷம்ஸி மற்றும் டுவைன் பிரிடோரியஸ் தலா 3 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோர்க்கியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த 49 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இதன்பிறகு, கேப்டன் தெம்பா பவுமா மற்றும் எய்டன் மார்கிரம் பாட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், வனிந்து ஹசரங்கா மார்கிரம் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார். அதற்கு அடுத்த ஓவரில் பவுமா மற்றும் பிரிடோரியஸ் விக்கெட்டை வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கினார்.

இதனால், கடைசி 2 ஓவர்களில் 25 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை தென் ஆப்பிரிக்காவுக்கு ஏற்பட்டது.

ஆனால், துஷ்மந்தா சமீரா வீசிய 19-வது ஓவரில் 1 சிக்ஸரைப் பறக்கவிட்டு நெருக்கடியை சற்று தணித்தார்.

கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால், டேவிட் மில்லர் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இலங்கை ரசிகர்கள் மனதை நொறுக்கினார்.

5-வது பந்தில் ககிசோ ரபாடா 1 பவுண்டரி அடிக்க தென் ஆப்பிரிக்கா வெற்றி இலக்கை அடைந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மில்லர் 13 பந்துகளில் 23 ரன்களும், 7 பந்துகளில் 13 ரன்களும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு இது 2-வது வெற்றி. புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.