நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நியூயார்க் ஆடுகளம் குறித்து ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா கருத்து!

நியூயார்க் ஆடுகளம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

News image

படம் | டி20 உலகக் கோப்பை (எக்ஸ்)

Updated On :6 ஜூன் 2024, 10:44 am

DIN

நியூயார்க் ஆடுகளம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி டி20 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி.

இந்த நிலையில், நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆடுகளத்தைப் பற்றி புரிந்துகொள்வதற்கு கடினமாக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதாக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ரோஹித் சர்மா பேசியதாவது: போட்டிக்கு டாஸ் வீசும்போதே ஆடுகளம் எப்படி இருக்கப் போகிறது எனத் தெரியவில்லை எனக் கூறினேன். புதிய ஆடுகளத்தில் பௌன்சர்கள் அதிகம் இருந்தது. நாங்கள் இரண்டாவது பேட்டிங் செய்தபோதும், ஆடுகளம் பேட்டிங்குக்கு எளிதாக இல்லை. ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றவாறு இருந்ததாக நினைக்கிறேன். இந்திய அணியில் உள்ள 4 வேகப் பந்துவீச்சாளர்களில் 3 பேர் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர்கள். அர்ஷ்தீப் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் அவர் கைப்பற்றிய இரண்டு விக்கெட்டுகள் உதவியாக இருந்தது என்றார்.

ஆடுகளம் தொடர்பாக ஜஸ்பிரித் பும்ரா பேசியதாவது: ஆடுகளம் குறித்து குறை கூறுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. டி20 போட்டிகளில் ஆட்டத்தின் தன்மைக்கேற்றவாறு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். எனது வழக்கமான பந்துவீச்சு திட்டத்தை செயல்படுத்தினேன். எனது திட்டம் கைகொடுத்தது என்றார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வருகிற ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.