அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இந்தியாவை வெல்ல பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டும்? ஆல்ரவுண்டர் பதில்!

இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டுமென அந்த அணியின் ஆல்ரவுண்டர் பேசியுள்ளார்.

News image
பாகிஸ்தான் வீரர்கள் (கோப்புப்படம்)
Updated On :8 ஜூன் 2024, 12:40 pm

DIN

இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டுமென அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஃபவாத் ஆலம் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் நாளை (ஜூன் 9) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்களிடம் அதிக உற்சாகம் இருக்கும். டி20 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணியும், அமெரிக்காவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் மோதுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான நாளைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டுமென்றால், விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஃபவாத் ஆலம் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஏனென்றால், அவர்கள் இருவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். பாகிஸ்தானிடமிருந்து எளிதாக இந்தியாவுக்கு சாதகமாக ஆட்டத்தை அவர்களால் எடுத்துச் செல்ல முடியும். இந்திய அணி சமபலத்துடன் வலிமையாக இருப்பதால் அவர்களை வீழ்த்துவது கடினம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.