தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

ஒளவையும் ரமணரும்!

திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் ஒரு சமயம் பெரிய விருந்து நடந்தது. அனைவரும் வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு, பின்னர் அஜீரணத்தால் சங்கடப்பட்டனர்.

News image
Updated On :17 ஜனவரி 2021, 7:02 am


திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் ஒரு சமயம் பெரிய விருந்து நடந்தது. அனைவரும் வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு, பின்னர் அஜீரணத்தால் சங்கடப்பட்டனர்.

அப்போது அன்பர் ஒருவர் ஒüவையார் பாடிய (வயிறு பற்றிய) பாடலைப் பாடி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

"ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என் நோவு அறியாய் இடும்பைக்கூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது'

அதைக் கேட்டு ரமண மகரிஷி உடனே ஒüவையார் பாடலைத் தழுவி, அவர் பாடலின் கடைசி வரிகளை அப்படியே வைத்து அப்போதே புதிதாக ஒரு பாடலைப் புனைந்து மொழிந்தார்.

"ஒருநாழிகை வயிறுஎற்கு ஓய்வு ஈயாய் நாளும்
ஒரு நாழிகை உண்பது ஓயாய் - ஒருநாளும்
என் நோவு அறியாய் இடும்பைக்கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது'

-எதிரொலி விசுவநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.