சென்னை, ஆக. 25: சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகனுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையின் தனிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ள அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி, மகள் ஆகியோரும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தேறி வரும் 10 மாணவர்கள்: சென்னை அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 6 எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் அண்மையில் உறுதி செய்யப்பட்டு, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தவிர பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் நான்கு மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரது உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 16 பேர்: சென்னை அரசு பொது மருத்துவமனையின் தனிப் பிரிவில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் 16 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


