குறைந்தபட்ச உத்தரவாத மகசூலுக்கான பிரீமியம் மட்டும் வசூலித்தால், விவசாயிகள் பாதிப்படைய நேரிடும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் 50 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டால், அந்தப் பகுதியில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 50 சதவீதம் வழங்கப்படும். அங்கு உத்தரவாத மகசூலுக்கு மட்டும் காப்பீடு செய்தவர்களுக்கு ஏக்கருக்கு சுமார் 6,500 மட்டுமே கிடைக்கும். அதிகபட்ச வாய்ப்புள்ள மகசூலுக்கு காப்பீடு செய்திருந்தால், அவர்களுக்கு ஏக்கருக்கு 12 ஆயிரத்துக்கும் மேல் கிடைக்கும்.