மேலும், பள்ளிகளுக்கு பாடநூல் கழகம் வழங்கும் புத்தகத்தின் விலையைவிட எங்களுக்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1-ம் வகுப்புக்கு 4 புத்தகங்கள் உள்ளன. பாடநூல் கழகத்திடம் பள்ளிகள் நேரடியாக வாங்கி, மாணவர்களுக்கு வழங்கினால் 4 புத்தகங்களின் விலை ரூ.200 மட்டுமே. ஆனால், விற்பனையாளர்களான நாங்கள் ரூ.240-க்கு விற்பனை செய்ய வேண்டும் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 6-ம் வகுப்புக்கான 5 புத்தகங்கள் பள்ளிகளுக்கு ரூ.250-க்கு வழங்கப்படுகிறது. ஆனால், விற்பனையாளர்கள் ரூ.325-க்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. எனவே,பாடநூல் கழகம் ஒரே பாடப் புத்தகத்துக்கு இரண்டு விதமான விலை நிர்ணயித்துள்ளதையும், விற்பனையாளர்களுக்கான கமிஷன் அளவை குறைத்துள்ளதையும் ஏற்க முடியாது.