மேலும், வங்கிகளில் கொள்ளை போகும் நகைகளுக்கு சந்தை மதிப்பிற்கு முழுத் தொகையும் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியே. வங்கியில் 8 கிராம் நகைக்கு ஒரு கிராம் தள்ளுபடி, மேலும் கிராம் 1-க்கு ரூ. 1050 என்ற அளவிலேயே கடன் வழங்கப்படுவதால், அந்தத் தொகைக்கே காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படும். இது சந்தை மதிப்புக்கு சமம் ஆகாது. இதற்கும் காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, தடயவியல் நிபுணர்கள் சோதனை போன்றவை முடிந்து, அது முழுமையாக நிறைவடைந்தால் மட்டுமே காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டுத் தொகையை வழங்கும்.