சென்னை துறைமுகம் 1881-ல் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. 2007-ல் இதன் 125-வது ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது துறைமுக ஊழியர்களுக்கு தலா 5 கிராம் தங்க நாணயமும், கைக்கடிகாரமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதற்கான விழா ஜனவரி 17, 2007-ல் நடைபெற்றது. அன்றைய மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில் அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதி, அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற துறைமுக ஆண்டு விழாக்களுக்கு ஆடம்பரமாகச் செலவு செய்யப்படுவதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்திருந்தனர்.