விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பொதுக் கூட்டங்கள் நடத்த தடை: கருணாநிதி கண்டனம்

எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குக்கூட அரசு அனுமதி தர மறுப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :22 மே 2013, 5:35 am IST

எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குக்கூட அரசு அனுமதி தர மறுப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

முதல்வர் ஜெயலலிதா மே 15-இல் சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றுக்குப் பதில் அளித்துப் பேசினார்.

அதில், சட்டம் ஒழுங்கைச் சீரழிக்கும் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியைத் தடை செய்ய இந்த அரசு தயங்காது. நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் கூறினார்.

காவல் துறையினர் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குக்கூட அனுமதி மறுக்கின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நுழைய திருமாவளவனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மே 15-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்துக்காக விளம்பரத் தட்டிகள் வைத்திருந்தவர்கள் மீதெல்லாம் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும்போது எதிர்க்கட்சியாக இருந்தபோது என்னென்ன செய்தோம் என்பதையெல்லாம் மறந்துவிட்டுச் செயல்படுவது நல்லது இல்லை. ஆட்சி என்றைக்கும் நிரந்தரமில்லை. இதை தற்போதைய ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டாம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.