பிளாஸ்டிக் பை ஒழிப்பில் தீவிரம் காட்டும் தமிழக அரசு, ஆவின் நிறுவனத்தில் அதிகரித்துள்ள பிளாஸ்டிக் பை உபயோகத்தை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பூமி வெப்பமயமாதல், நிலத்தடி நீர்மட்டம் சரிவு ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு, பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகத்தை நிறுத்துதல், பூமியில் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், மரம் வளர்த்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இதுகுறித்த அரசின் உத்தரவின் பேரில் தமிழகத்தின் பெரும்பாலான நகராட்சி, ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கடைகளில் விற்கப்படும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்வது, மக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன்படி குப்பையை பிரித்து கொட்டுவது, கடைகளுக்கு வீடுகளில் இருந்து துணிப் பைகளை எடுத்துச் செல்ல மக்களை அறிவுறுத்துவது போன்ற நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுத்து வருகின்றனர். எனினும், தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக கேரிபேக்குகள், உணவு பொருள்கள் அடைத்து வரும் பைகள், இலைகளுக்கு பதில் ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மைகா உள்ளிட்ட பல வகைகளில் பிளாஸ்டிக் உபயோகத்தில் உள்ளது.
அரசு நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு: ஒருபுறம் அரசு பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்தி வந்தாலும், மறுபுறம், அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் பிளாஸ்டிக் உபயோகம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் தமிழகம் முழுவதுமுள்ள ஆவின் பாலகங்களில் மக்களுக்கு பிளாஸ்டிக் பையில் பொருள்களை வழங்குகின்றனர். அதே போல் கூட்டுறவுத் துறையிலும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.
பிளாஸ்டிக் பைகளின் ஒழிப்பை தீவிரமாக்கும் அரசு முதலில் தனது நிறுவனங்களில்
ஒழிக்க வேண்டும், அப்போதுதான் மக்களிடமும் அதுகுறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
விரைவில் தடை:இதுகுறித்து ஆவின் நிர்வாகத்தில் கேட்டபோது: ஆவின் பாலகங்களில் இதுபோல் பிளாஸ்டிக் பைகள் வழங்குவதை தவிர்த்து வருகிறோம். மேலும் வீட்டில் இருந்து பைகளை எடுத்து வரும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். இன்றும் சில பாலகங்களில் பிளாஸ்டிக் பைகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் 9 மைக்ரான் அளவுக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடிய பைகள் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. அதுவும் விரைவில் தடை செய்யப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் இன்று அம்பேத்கா் மாளிகை அமைக்க அடிக்கல்

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


