நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பாழடைந்துவரும் பூவலை ஏரி சீரமைக்கப்படுமா?

கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலையில் உள்ள ஏரி சீரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2013, 4:32 am IST

கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலையில் உள்ள ஏரி சீரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

பூவலை பகுதியில் சுமார் 54 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது.

ஆனால், முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் தற்போது இந்த ஏரி, சிறு குட்டை போல காட்சியளிக்கிறது.

இந்த பூவலை ஏரியை நம்பி சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில், ஏரி பல ஆண்டுகள் தூர்வாரப்படாததால் மழைக்காலங்களில் ஏரியில் நீர் தேங்கும் அளவும் குறைந்து அப்பகுதியில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஏரியில் ரூ.80 லட்சம் செலவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்

பட்டன. ஆனால், ஏரியின் மதகுகளை திறந்து மூடும் வகையில் அமைப்பு ஏற்படுத்தப்படாததால், ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் வீணாகிறது.

இதனால் பயிர்களுக்கு போதிய நீரின்றி, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மழைக்காலத்திற்கு முன்பாக பூவலை ஏரியை தூர்வாரி, முறையான மதகுகளை அமைத்து விவசாயம் செழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.