கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலையில் உள்ள ஏரி சீரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
பூவலை பகுதியில் சுமார் 54 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது.
ஆனால், முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் தற்போது இந்த ஏரி, சிறு குட்டை போல காட்சியளிக்கிறது.
இந்த பூவலை ஏரியை நம்பி சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில், ஏரி பல ஆண்டுகள் தூர்வாரப்படாததால் மழைக்காலங்களில் ஏரியில் நீர் தேங்கும் அளவும் குறைந்து அப்பகுதியில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஏரியில் ரூ.80 லட்சம் செலவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்
பட்டன. ஆனால், ஏரியின் மதகுகளை திறந்து மூடும் வகையில் அமைப்பு ஏற்படுத்தப்படாததால், ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் வீணாகிறது.
இதனால் பயிர்களுக்கு போதிய நீரின்றி, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மழைக்காலத்திற்கு முன்பாக பூவலை ஏரியை தூர்வாரி, முறையான மதகுகளை அமைத்து விவசாயம் செழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


