சேலத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை: மின்னல் பாய்ந்து பெண் பலி
சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் பாய்ந்ததில் பெண் பரிதாபமாக


சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் பாய்ந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் முடிவடைந்த நிலையிலும் திங்கள்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் வெகுவாக இருந்தது.
இந்த நிலையில் பிற்பகலில் திடீரென மழை மேகங்கள் திரண்டன. சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட கன்னியாம்பட்டி என்ற இடத்தில் வேடத்தாள், பெருமாயி ஆகியோர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் தாக்கியதில் வேடாத்தாள் (34)அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெருமாயி மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பெருமாயியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்ததும் கொங்கணாபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...