அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குஜராத்தில் பாஜக நிர்வாகி கொலை நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்த மூவர் சேலம் நீதிமன்றத்தில் சரண்

குஜராத்தில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று பேர் சேலம் ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்

News image
Updated On :23 ஜூன் 2014, 1:14 pm

தங்கராஜா

குஜராத்தில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று பேர் சேலம் ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.

குஜராத் மாநிலம் சூரத் லால்சர்வேஜா பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் ஹோட்டல், டீக்கடை, தள்ளுவண்டி கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், மே 10ஆம் தேதி அங்குள்ள தமிழர்கள் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சூரத் மாநகராட்சி மேயரின் உறவினரான குபேந்திரபாய் சோமாபாய் பட்டேலிடம் ஒருதரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சோமாபாய்பட்டேல் தரப்பினர், புகார் செய்தவர்களின் எதிர்தரப்பினரிடம் இருந்து இரு சக்கர வாகனங்களை பறித்து சென்றனராம்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர், சோமாபாய் பட்டேல் தரப்பினரிடம் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின்போது சோமாபாய் பட்டேல், அவரது கூட்டாளிகள் இருவருக்கு கத்திகுத்து விழுந்தது. படுகாயம் அடைந்த சோமாபாய் பட்டேல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். பாரதிய ஜனதா பிரமுகரான சோமாபாய் பட்டேல் இறந்ததை அடுத்து அப்பகுதியில் வன்முறை ஏற்பட்டது.

இதுபற்றி சூரத் நகரின் மகிதாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் பொய்கைமேடு பகுதியைச் சேர்ந்த மாரிதேவன் மகன் குருசாமி(37), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஆறுமுகசெல்வன்(22), கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜா(28) ஆகியோர் சேலம் ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தனர்.

தொடர்ந்து, இவர்களது சரண் குறித்து குஜராத் மாநில காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் நடந்த கொலையில் சேலத்தில் மூவர் சரணடைந்த சம்பவத்தால் சேலம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.