மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுவை சட்டப்பேரவை உறுதிமொழி குழுக் கூட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவை உறுதிமொழி குழுக்கூட்டம் புதன்கிழமை பேரவை வளாகத்தில் நடைபெற்றது. குழுத் தலைவரும், அரசு கொறடாவுமான ஜி.நேரு தலைமை தாங்கினார்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2015, 9:37 am

சுஜித்குமார்

புதுச்சேரி சட்டப்பேரவை உறுதிமொழி குழுக்கூட்டம் புதன்கிழமை பேரவை வளாகத்தில் நடைபெற்றது. குழுத் தலைவரும், அரசு கொறடாவுமான ஜி.நேரு தலைமை தாங்கினார்.

குழு உறுப்பினர்கள் நமச்சிவாயம் (காங்.), அன்பழகன் (அதிமுக), நந்தாசரவணன் (திமுக), சிவா (என்.ஆர்.காங்.) பேரவை செயலாளர்  மோகன்தாஸ் மற்றும் அரசின் பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ. நமச்சிவாயம் பேசியதாவது: சட்டப்பேரவையில் மாநில அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. கடந்த 4 ஆண்டுகளில் முதல்வரும் ,  அமைச்சர்களும பல உறுதிகளை பேரவையில் அளித்தனர். ஆனால் இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதை கண்காணிக்கும் குழுவும் சரிவர செய்யவில்லை. குழு கூட்டத்தில் கேள்விகேட்கும்போது உடனடியாக பணிகளை செய்வதாக அதிகாரிகள்

தெரிவிக்கின்றனர். ஆனால் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார். இதே போல் அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகனும், அரசு பேரவையில் தரும் உறுதிமொழிகள், வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றுவதில்லை. அதிகாரிகள் எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டார். அப்போது அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.