கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு போராடி பெற்ற தொழிலாளர் நல சட்டங்களினால் கிடைத்த சலுகைகளை பறிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. நிரந்திர தொழிலாளர்களை குறித்து, பயிற்சியாளர்கள் என தொழிலாளர்களை நியமனம் செய்து தொழிலாளர்கள் நலனை சுரண்டி வருகிறது. புதிய சட்டங்கள் தொழில்துறைக்கு நலம் பயக்கவில்லை. ஒட்டு மொத்த தொழிலாளர்கள், பணியாளர்கள் நலன் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.