எழுத்தாளர் கலைமாமணி விக்கிரமன் (87), சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் விக்கிரமனின் இயற்பெயர் வேம்பு. இவர் 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுத சுரபி' மாத இதழின் ஆசிரியராக இருந்தவர். அதோடு, இலக்கிய பீடம் மாத இதழையும் நடத்தி வந்தார்.
இவர் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியையும் வகித்துள்ளார். இவரது தந்தை சுப்பிரமணிய ஐயர், பாரதியாருடன் சுதேசமித்திரன் நாளிதழில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு மனைவி ராஜலட்சுமி, மணி, கண்ணன் ஆகிய இரண்டு மகன்கள், உமா தேவி, ஜெயந்திர மணி, ஹேமா சங்கரன் ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.
இறந்த விக்கிரமனின் உடல் அவரது மேற்கு மாம்பலம் இல்லத்தில் (3, ஜெய்சங்கர் தெரு) தற்போது வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதிச் சடங்கு சென்னையில் புதன்கிழமை (டிசம்பர் 2) பிற்பகலில் நடைபெற உள்ளது.
தொடர்புக்கு: 9003175272.
எழுத்தாளர்கள் இரங்கல்: விக்கிரமனின் மறைவுக்கு எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஸ்டாலின் குணசேகரன், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!

உலகக் கோப்பையின் முதல் திருட்டு: ஹைதி தோல்விக்கு ஃபிஃபாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



