அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவருக்கு மேலும் ஒரு ஆயுள் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவருக்கு, மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2015, 3:50 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவருக்கு, மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், கே.எம்.பி.சண்முகசுந்நதரம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் ரா.காலசாமி. இவரது 9 வயது மகளை 8.10.2006-ம் தேதி இதே இடத்தைச் சேர்ந்தே நந்தவனநாடார் மகன் பாதமுத்து (படம்) (34) என்பவர் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாதமுத்துவைக் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி என்.ராஜலட்சுமி, பாதமுத்துவிற்கு ஆயுள் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

பாதமுத்து, ஏற்கனவே 8.4.2008-ம் தேதி மம்சாபுரத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 22.7.15-ம் தேதி இதே நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.