விஜயகாந்த்தை பாதுகாப்புடன் அனுப்பி வைத்த புதுச்சேரி போலீஸார்
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு பலத்த பாதுகாப்புடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை போலீஸார் அனுப்பி வைத்தனர்.
.jpg?w=1200&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=1200&auto=format%2Ccompress&fit=max)
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு பலத்த பாதுகாப்புடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை போலீஸார் அனுப்பி வைத்தனர்.
கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இருந்த விஜயகாந்த், திங்கள்கிழமை இரவு புதுச்சேரியில் உள்ள ஓட்டல் அண்ணாமலையில் தங்கினார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையிலேயே ஓட்டல் முன்பு அதிமுகவினர் ஏராளமானோர் கூடி போராட்டங்களை நடத்தினர். அதே போல் செய்தியாளர்களும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் ஓட்டலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திப்பதற்காக செய்தியாளர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். ஆனால் அவர் எதுவும் பேசாமல் செல்ல முயன்றபோது, சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது புதுச்சேரி போலீஸார் அவரை பாதுகாப்புடன் காருக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...